Monday, February 28, 2011

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-5

11. கீழத்தஞ்சையின் போராட்ட வரலாறு என்பது அங்குள்ள சூழ்நிலை, வழக்கங்கள், மரபுகளையயாட்டியும் சில புதிய யுக்திகளை மேற்கொண்டது பற்றி....
உரிமை, மரியாதைக்கான போராட்டங்கள் பரவலாக நடந்தது. வலிவலம் தேசிகர் பண்ணை முதல் கடைக்கோடிப் பண்ணை வரை போராட்டம் நடந்தது. இடங்களுக் கேற்றபடி போராட்டத்தின் தன்மைகள் மாறிக் கொண்டிருந்தன. சில இடங்களில் சண்டை போட வேண்டியிருந்தது. சில இடங்களில் அமைதியாக இருந்து உள்ளே போக வேண்டியிருந்தது. போராட்டம்னா ஒழுங்குபடுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட எதிர்ப்பு. இதில் எதிரிகளுக்கு நிர்பந்தம் தரக்கூடிய, மன உளைச்சல் தரக்கூடிய போராட்டங்களும் அடங்கும். எந்த பிரச்சனைன்னாலும் முதல்ல மிராசுதாரர்கிட்ட பேசணும் சொல்வோம். சில முதலாளி பேச முடியாதுன்னு ஏஜண்ட்கிட்ட பேசச் சொல்லுவாங்க. தேசிகர் பண்ணைன்னா அவரு பேச மாட்டார். ராமசுப்பையர்னு ஏஜன்ட் (அல்லது) யூனியன் சேர்மன் சண்முகசுந்தரம்ன அவர்தான் பேசுவார். பேசுவோம்.
பேச்சுவார்த்தை முடியாது. இல்லைன்னா, ஒரு அமைதியான போரட்டம் மேற்கொள்வோம். பண்ணைய வீட்டுல சாவு விழுந்தா ஒருமுறை உண்டு. ஆளுக ஆணும் பெண்ணும்மா அடுகெடையா திரண்டு தப்படிச்சுக்கிட்டு பச்ச மட்டை, குறுத்தோலை, எளனி இதெல்லாம் கொண்ட போறது பழக்கம். கோவில்லேருந்து கும்ப கலச மரியாதை வரும். இது அவங்க தரப்பு முறை. குறிப்பிட்ட பண்ணைக்கு எதிராகப் போராடுகிற போது இப்படி ஆண்களும் பெண்களுமா திரண்டு இந்த பொருள்களோடு பாடையும் சேர்த்து கட்டிக்கிட்டுப் போயிடுவோம். வாசல்ல வச்சிக்கிட்டுத் தப்படிச்சுக்கிட்டு ஒப்பாரி வைப்போம். எப்படி நம்மள
எழவெடுக்கிற மாதிரி கொடுமைகள் நடக்குதோ அதே வழியிலேயே அவனுக்குப் புத்தி கொடுக்கிற மாதிரியான போராட்டம். அவர்கள் பெண்களுக்கு அதிர்ச்சி வரும். என்னங்க இது நம்ம வீட்டு வாசல்ல இப்படி? என்ன இது எழவா? காடா? இப்படிப் பார்த்துக்கிட்டிருக்கீங்களே! என்னன்ன கேட்டு தீர்த்து விட மாட்டீங்களான்னு பிரசர் வரும்.
மூடிய கதவைத் திறந்துகிட்டு பண்ணையார் வருவார். பிறகு பேச்சுவார்த்தை அங்கேயே நடக்கும். இப்படிப் பல பண்ணைகளிலே பேசி முடிச்சிருக்கோம். அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களம் புரிஞ்சிக்க இதை ஒரு வாய்ப்பாகவும் செய்தோம்.
12. சிற்றூர்களில் வலுவான அமைப்பாக்கப்பட்டிருந்த சாதி அமைப்பைக் கீழத் தஞ்சையில் கட்சி கையாண்ட விதம் பற்றி....
நிலப்பிரபுவ எதிர்க்கிற வர்க்கப் போராட்டத்தில் சாதி ஆதிக்க எதிர்ப்பும் மிக மையமான ஒரு வி­யமாகத்தான் இருந்தது. இத இரண்டு விதமா பார்க்க முடியும். ஒன்று வலுவான அமைப்பிலிருந்த ஆதிக்க சாதிகள். மற்றது ஒடுக்கப்பட்டோரிடமிருந்த, தற்காப்புக் கானதாயிருந்தாலும் வலுவாகவே கட்டப்பட்டிருநத சாதிப் பஞ்சாயத்துகள்.
தொடக்கத்துல கம்யூனிஸ்ட் கட்சி நிலப்பிரபுவை எதிர்க்கிற போராட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களிட்ட இருந்த சாதியக் கட்டுப்பாட்டை அப்படியே பயன்படுத்திக் கொண்டது. அந்த நாட்டாமை, பஞ்சாயத்து அமைப்பை அப்படியே பயன்படுத்திக் கொண்டோம். நாட்டாமைன்னா அவர் வீட்டுல அடுப்பு பத்த வைச்ச பின்னாடி, மத்த வீட்டுப் பெண்கள் அங்கிருந்துதான் நெருப்பு கொண்டு போவாங்க அவுங்க வீட்டுக்க. நீர், நெருப்பு உட்பட எல்லாத்துக்கும் நாட்டாமை அவர்தான். அந்த அளவுக்கு நிலைமைகள் இருந்த காலம். அப்ப தலைவர்கள் கிராமங்களுக்குப் போவாங்க. போனா கட்சி சம்பந்தமான தகவல்கள், சந்தா இப்படிப் பேசின பிறகு நாட்டாமை கேட்பார் ; அய்யா வந்த வேலைகள் (கட்சி வேலைகள்) முடிஞ்சிருச்சாம்மபார். முடிஞ்சிருச்சுன்னு சொன்னா, அப்ப நீங்க போயிட்டு வாங்க. நாங்க ஊர் வேலைகளைப் பார்க்கிறோம்பார. ஊர் வேலைன்னா வழக்கமா நடக்கிற அவங்களோட கிராமப் பஞ்சாயத்து, உள்ளூர் சம்பந்தப்பட்ட வேலைகள்.
சாதி முறைகள் வேற, கட்சிகள் வேற அப்படிங்கிற நிலைமை 64 இல் ஏற்பட்ட வீச்சில்தான் மாறிச்சி. ஒரு நிலையில கம்யூனிட் கட்சி நாட்டாமைகளைக் கட்சித் தலைவராக்கிச்சி. மத்தவங்களை செயலாளர் இன்னும் மத்த மத்த பொறுப்புக்கு வச்சாங்க. சாதி உணர்வுங்கிற எடுத்துகிட்டு கொள்கை உணர்வுங்கிறத போதிச்சதங்கிறது 64 க்குப் பின்னர்தான் நடந்தது. அந்த எழுச்சி அவர்களிட்ட இருந்த சாதிக் கட்டுப்பாட்டைக் கட்சிக் கட்டுப்பாடா நாகைத் தாலுக்காவுல மாத்திச்சு. பழைய கட்டுப்பாட்டில உதவிக்க நின்னவுங்க இப்ப ஓரணியில் திரண்டாங்க. இது சாதியக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, கொள்கைக் கட்டுப்பாடுங்கிற மட்டத்துக்கு அவர்களை உயர்த்துச்சு. அந்த முன்னோக்கிய சூழல்ல அவர்கள்டேயிருந்து பல நல்ல ஊழியர்களும், தலைவர்களும் உருவானாங்க.
13. பொதுவுடைமைக் கட்சிக்கு எதிராக சாதி என்கிற ஆயுதத்தை மிராசுதாரர்களும் பிரயோகித்திருப்பார்கள் தானே?
ஆமா. அத பெரிய ஆயுதமாகத்தான் கையிலெடுத்தாங்க. நாம சாதிப் போராட்டத்த சேர்த்துத்தான் வர்க்கப் போராட்டத்த முன்னெடுத்தோம். சாதி ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் ரெண்டா இருந்தாலும், ரெண்டுமே ஒன்றுக்குள் ஒன்றான ஒரே எதிரிங்கிற தெளிவான பார்வை நமக்கு இருந்திச்சி. விவசாயத் தொழிலாளர் பெரும்பாலும் தாழ்த்தப் பட்டத் தொழிலாளர் கட்டுப்பாடா ஒன்றிணைஞ்சு நின்னது நம்முடைய வெற்றி. அதுக்கு எதிரா எல்லா சாதி இந்துக்களையும் ஒன்னா திரட்டணும்ன நிலப்பிரபுக்கள் பெருமுயற்சி எடுத்தாங்க. ஆனா பொருளாதார நிர்ப்பந்தம் காரணமா மத்திய தர வகுப்பு ஆண்களும் பெண்களும் விவசாய வேலைக்கு வர வேண்டியதாயிருந்துச்சு. நடவுக்கு வரும்போது ரெண்டு தரப்பு பெண்களும் ஒன்னா நிக்க வேண்டிய நிலைமை. ஆக அதே வேலை, ஒன்னா நிக்க ¼ண்டிய நிர்ப்பந்தம். அதே கூலி. இந்த சூழல்ல அவங்கள சாதிய மட்டும் சொல்லிப் பிரிக்க முடியாத நிலைமை யதார்த்தமானதாயிருந்துச்சு. சாதி வெறிங்கிறது நிலப்பிரபு தூண்டிவிட்ட உணர்ச்சி என்பத தவிர வாழ்க்கை நடைமுறையும் தரமும் இவங்களுக்கென்னவோ அதே தான் அவங்களுக்குமிருந்தது. அது மட்டுமில்லாம நில பிரவுவோட வலையில விழுந்துடாம அவங்கள அமைப்பாக்குறதலயும், வழிகாட்டுவதிலேயும் கம்யூனிஸ்ட் கட்சி முனைப்பா நின்னு வெற்றி கண்டது.

No comments:

Post a Comment