Monday, February 28, 2011

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல் - 1



தோழர் அ.கோ.கஸ்தூரிரங்கன் (ஏ.ஜி.கே.)

இது ஒரு தனிமனிதரின் பெயர் என்பதை விடவும் ஓர் ஆற்றல், உணர்வு, வேகம் என்பதன் குறியீடு என்றே எனது சிறு வயதில் அறிந்திருக்கிறேன் நான். கம்பீரமாய் இசை முழக்கம் எழுப்புகிற அந்த ஒற்றைக்குரலும் அதைத் தொட்டுத்தொடர்கிற பல குரல்களின் கூட்டிசை முழுக்கமும் நடவுப் பாடல்களின் தனித்துவம், எங்களூர் வயல்வெளிகளிலிருந்து எந்த பக்கவாத்தியங்களும் இல்லாமல், இயற்கையாய் எழுந்த பரவுகிற அந்த மக்களிசைப்பாடல்களின் நாயகனாய் இருந்தார் ஏ.ஜி.கே. தோழர் மணலி கந்தசாமிக்கு அடுத்து பரபரப்பாகப் பேசப்பட்ட ஏ.ஜி.கே. யின் முழுப்பெயர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன்.
இன்று நாகப்பட்டினம், திருவாரூர் என்று இரு மாவட்டங்களாக இருக்கிற அன்றைய கீழத்தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் மேற்கு வங்கம் என்று பெருமிதமாய்ச் சொல்லப்பட்டது. இந்தியச் சூழலில் முதன் முதலாக வர்க்கப் போராட்டத்தையும் வருணப் போராட்டத்தையும் ஒரு சேர நடத்தி வெற்றி கண்ட ஒரு முன்னோடி மண்டலம் அது. விடுவிக்கப்பட்ட செம்பிரதேசம் என்று சொல்லப்படும் அளவுக்கு அன்று முதலாளித்துவத்துக்கும் அரசுக்கும் சவாலாய் உருவெடுத்திருந்தது.
அதன் அறுபதுகளின் போராட்டமயமான உச்சக்கட்டத்தில் எல்லா இயக்க நடவடிக்கைகளிலும் முன்னின்றவர் தோழர் ஏ.ஜி.கே. கீழத் தஞ்சை இன்னும் விரிந்து வியாபிக்க வேண்டிய நிலைக்கு மாறாக, இன்று குன்றிக் குறுகிப் போய்விட்டது. அவருடனான இந்த சந்திப்பின் நோக்கம் வாழ்ந்து கெட்டதைச் சொல்லும் வரலாற்றுப் புலம்பல்அல்ல ; இழந்த சொர்க்கத்தை அசை போடும் மலரும் நினைவுகளுமல்ல ; மாறாக, அதைத் தேடி அடைய, மீட்டுருவாக்கிட கொஞ்சமேனும் பயன்பட வேண்டும் என்பது தான்.
-           பாவெல் சூரியன்

No comments:

Post a Comment